இந்திய அரசியலமைப்பு
INDIAN CONSTITUTION
முகப்புரை
(THE PREAMBLE)
இறையாண்மை கொண்ட சமதர்ம
சமயச்சார்பற்ற மக்களாட்சி குடியரசை அமைத்திட உறுதி பூண்ட இந்திய மக்களாகிய நாம்,
அனைத்து குடிமக்களும் சமூக,
பொருளாதார, அரசியல் நீதி
எண்ணத்தில் வெளிபடுத்தலில்,
நம்பிக்கையில் பற்றுறுதியில், வழிப்படுதலில் சுதந்திரம்
தகுநிலையிலும்
வாய்ப்புரிமையிலும் சமநிலை பெறவும்
அதை அவர்கள் யாவரிடத்தும்
மேம்படுத்தவும்
தனிநபர் கண்ணியம் மற்றும்
நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு
கொண்ட சகோதரத்துவம் பெற்றிட
உறுதி செய்து,
இந்த 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் நாள், நமது அரசமைப்பு அவையில் இந்த அரசமைப்புச் சட்டத்தை ஈங்கு ஏற்று, இயற்றி நமக்கு வழங்குகிறோம்.
இந்த 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் நாள், நமது அரசமைப்பு அவையில் இந்த அரசமைப்புச் சட்டத்தை ஈங்கு ஏற்று, இயற்றி நமக்கு வழங்குகிறோம்.
·
இந்திய
அரசமைப்பானது சட்ட முகப்புரையுடன் தொடங்குகிறது.
·
முகப்புரை
என்னும் வார்த்தையனது அரசியலமைப்பின் அறிமுகம் அல்லது முன்னுரை என்பதைக் குறிக்கின்றது.
·
இந்திய
அரசியலமைப்பின் முகப்புரை பண்டித ஜவஹகர்லால் நேரு அவர்களால் டிசம்பர்
13, 1946 அன்று வரைவு செய்யப்பட்ட “
குறிக்கோள் தீர்மானத்தை” அடிப்படையாக்க் கொண்டது.
முகவுரையின்
முக்கிய கலைச் சொற்கள் :
இறையாண்மை
: (Sovereign)
·
இறையாண்மை
என்பது ஒரு நாட்டின் தனிப்பட்ட அதிகாரத்தைக் குறிக்கின்றது.ஒருவரையும் தன்னை விட
மேலான அதிகாரம் கொண்டவர் என்பதை ஏற்பதில்லை.அது தன்னுடைய விவகாரங்களை தானே
நடத்துவதற்கு சுதந்திரம் பெற்றுள்ளது.
சமதர்மம் :
(Socialist)
·
வருமானம்,
தகு நிலை மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் சம நிலையற்ற நிலையைப் போக்குவதும்,
வேலை செய்வோருக்குக் கௌரவமான வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்துவதும் இதன் முக்கியமான
நோக்கமாகும்.இவ்வாசகம் 1976 ஆம் ஆண்டு 42 வது அரசியலமைப்பு சட்ட
திருத்தம் வாயிலாக சேர்க்கப்பட்டது.
மதச்சார்பின்மை
: (Secular)
·
42
வது சட்ட திருத்தம்
வாயிலாக சேர்க்கப்பட்டது.
·
இது
எந்த ஒரு சமயத்திற்கும் முன்னுரிமை கொடுப்பதிலிருந்து அரசு விலகி இருக்க வேண்டும் என்பதை
வலியுறுத்துகிறது.
மக்களாட்சி : (Democratic)
·
மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் அரசு நடத்தப்பட வேண்டும்.மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட
பிரதிநிதிகளின் நம்பிக்கையைக் கொண்டிருக்கும் வரையில்தான் பதவி வகிக்க முடியும் என்பதை
மக்களாட்சி என்ற சொல் உணர்த்துகிறது.
குடியரசு : (Republic)
·
இந்தியா,
குடியரசுத் தலைவர் என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையைக் கொண்டுள்ளது.
·
இந்தியக்
குடியரசுத் தலைவர் பதவி மரபு வழி கிடையாது.
·
அனைத்து
பொது அலுவலகங்களும் எந்த பாகுபாடும் இல்லாமல் ஒவ்வொரு குடிமகனுக்கும்
திறக்கப்படும்.
நீதி : (Justice)
·
சமூக
நீதி: (Social Justice) சாதி,
நிறம், இனம், பாலினம்,
மதம், மொழி, அடிப்படையில்
எந்தப் பாகுபாடும் கூடாது. அனைவருக்கும் சமமான மதிப்பு மற்றும் வாய்ப்புகள்
கொடுக்கப்படுதல்.
·
பொருளாதார
நீதி: (Economic
Justice) செல்வப் பங்கீடு மற்றும்
அனைத்து மக்களின் வாழ்க்கைக்கும் ஒரு கண்ணியமான வாழ்க்கைத்தரம் வழங்குதல்.
·
அரசியல்
நீதி: (Political Justice)
அனைத்து குடிமக்களுக்கும் சமமான அரசியல் உரிமை வழங்கப்படவேண்டும்,அரசாங்கத்தின் அனைத்து அரசியல் அலுவலகங்களையும் அணுக சம வாய்ப்பு
வழங்கப்படவேண்டும்.
தனியுரிமை
: (Liberty)
·
இந்திய
குடிமக்கள் தங்களின் எண்ணத்தில் சுதந்திரம், வெளிப்பாடு,நம்பிக்கை மற்றும்
வழிபாடு, போன்றவற்றில் மீறல் ஏற்பட்டால் தங்கள் அடிப்படை
உரிமைகளின் மூலம் நீதிமன்றத்தில் அணுகமுடியும்.
சமத்துவம் : (Equality)
·
எந்த
பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
சகோதரத்துவம்
: (Fraternity)
·
தனிநபர்
மற்றும் நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு கண்ணியம் போன்றவற்றை அனைவரும்
மேம்படுத்தவும் மற்றும் மதிக்கவும் வேண்டும்.
முகப்புரை
திருத்தம் :
1960
பெருபாரி யூனியன்(Berubari union) வழக்கு
·
முகப்புரை
அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இல்லை.
ஆனால் முகப்புரை முக்கியம்.
கேசவானந்த
பாரதி(Kesavananda
bharathi)(1973) மற்றும் எல்.ஐ.சி (1995)வழக்கு
முகப்புரை அரசியலமைப்பின் ஒரு
பகுதியாகும். முகப்புரை 1976, 42 வது அரசியலமைப்பு திருத்த சட்டம் மூலம்,
ஒரே ஒரு முறை மட்டும் சட்டத்திருத்தம் செய்யப் பெற்றுள்ளது.
Comments
Post a Comment
உங்கள் கருத்து வரவேற்கப்படுகிறது.......