Skip to main content

தமிழ் இலக்கணம் - அறிமுகம்


தமிழ் இலக்கணம் - அறிமுகம்

தமிழ், இலக்கிய வளமும் இலக்கண வளமும் உடைய மொழி. பல நூற்றாண்டுகளாகவே தமிழில் இலக்கியம் நன்கு செழித்து வளர்ந்துள்ளது. இலக்கியங்களைப் போலவே இலக்கண நூல்களும் மிகுதியாகத் தமிழில் தோன்றியுள்ளன. இலக்கியம் மொழியை அடிப்படையாகக் கொண்டது. மொழி அமைப்பை விளங்கிக்கொள்ள இலக்கணம் உதவியாக இருக்கிறது.
இலக்கியமும் இலக்கணமும்
இலக்கியங்களை முதலில் வாய்மொழியாகப் பாடிக்கொண்டிருந்தனர். அவற்றை எழுதி வைக்கத் தொடங்கியபோது, மொழியின் அமைப்புப் பற்றிய சிந்தனை தோன்றியது. மொழி அமைப்புப் பற்றிய சிந்தனையின் காரணமாக இலக்கணம் தோன்றியது.
எனவே முதலில் தோன்றியது இலக்கியமே. அந்த இலக்கியத்தைப் பார்த்து, இலக்கணத்தை உண்டாக்கினார்கள். கால மாற்றத்தால் இலக்கியத்திலும் சில மாற்றங்கள் தோன்றின. இதனால் இலக்கணத்தை மீண்டும் மாற்றி எழுதவேண்டிய தேவையும் ஏற்பட்டது.
இவ்வாறு இலக்கியத்திலும் மொழியிலும் காலம்தோறும் மாற்றங்கள் ஏற்பட்டு வந்ததால், இலக்கணத்திலும் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. எனவே தமிழில் காலம்தோறும் புதிய இலக்கண நூல்கள் தோன்றிக் கொண்டே இருந்தன.
இலக்கண நூலை இயற்றுபவரை இலக்கண நூல் ஆசிரியர் என்று அழைப்பர். தமிழில் காலம் தோறும் பல ஆசிரியர்கள் இலக்கண நூல்களை எழுதி வந்துள்ளனர். சமண சமயத்தைச் சார்ந்த துறவிகளே இலக்கண நூல்களை மிகுதியாக இயற்றியுள்ளனர். எனினும் சைவம், வைணவம், கிறித்தவம் முதலிய சமயத்தைச் சேர்ந்தவர்களும் இலக்கண நூல்களை இயற்றியுள்ளனர்.
இலக்கண நூல் ஆசிரியர்கள் இலக்கணத்தை, விதிகளாகச் செய்யுள் வடிவில் அமைத்து இயற்றினார்கள். விதிகளைச் சூத்திரம் என்றும் நூற்பாஎன்றும் கூறுவர். ஒரு பொருள் பற்றிய சில விதிகள் எல்லாவற்றையும் தொகுத்து ஓர் இயலாக அமைப்பர். ஓர் இலக்கண நூலில் அப்படிப் பல இயல்கள் சேர்ந்து அமைந்திருக்கும்.
இலக்கண நூல்களை இயற்றும் ஆசிரியர்கள், அவற்றைச் சூத்திரங்களாக இயற்றியதால், எளிதில் பொருள் விளங்காமல் இருந்தன. மாணவர்கள் இவற்றைக் கற்பதற்கு மிகவும் இடர்ப்பட்டனர். அதனால், மாணவர்க்கு விளங்கும் வகையில் அச்சூத்திரங்களுக்கு எளிமையாக உரைநடையில் சிலர் பொருள் எழுதினார்கள். இவர்கள் எழுதியதை உரைகள் என்று வழங்குவர். இப்படி இலக்கண நூல்களுக்கும் இலக்கிய நூல்களுக்கும் விளக்கம் எழுதியவர்களை உரையாசிரியர் என்று அழைப்பர்.

இலக்கணத்தின் வகைகள்

       தமிழ் இலக்கணம் ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எனவேஐந்திலக்கணம் என்ற சொல்மரபு வழங்கி வருகிறது. அவை, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவை ஆகும்.
எழுத்து, சொல் இலக்கணங்கள் மொழிக்கு இலக்கணம் கூறுபவை ஆகும்.
       பொருள் இலக்கணம் மொழியில் எழுதப்படும் இலக்கியத்தின் உள்ளடக்கத்திற்கு இலக்கணம் கூறுவது ஆகும். 
  யாப்பிலக்கணம் என்பது இலக்கியம் எழுதப்படும் செய்யுளின் இலக்கணம் கூறுவதாகும். யாப்பிலக்கணத்தின் ஒரு வளர்ச்சியாகப் பாட்டியல் இலக்கணம் தோன்றியது.
       பாட்டியல் இலக்கணம் இலக்கிய வடிவங்களினது இலக்கணத்தைக் கூறுகிறது. பிள்ளைத்தமிழ், உலா, தூது போன்ற இலக்கியங்களின் இலக்கணம் பாட்டியல் நூல்களில் இடம்பெற்றுள்ளது.
       அணி இலக்கணம் செய்யுளில் அமையும் உவமை, உருவகம் முதலிய அணிகளின் இலக்கணத்தைக் கூறுகிறது.
எழுத்து இலக்கணத்தில், எழுத்துகளின் வகைகள், அவை ஒலிக்கும் கால அளவு, எழுத்துகள் பிறக்கும் முறை ஆகியனவும் சந்தி இலக்கணமும் இடம்பெற்றுள்ளன. சந்தி இலக்கணம் என்பது இரண்டு சொற்கள் சேரும்போது முதல் சொல்லின் கடைசி எழுத்திலும் இரண்டாம் சொல்லின் முதல் எழுத்திலும் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லுவது ஆகும்.
சொல் இலக்கணத்தில், சொல்லின் வகைகளான பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியனவும் திணை, பால், எண், இடம், காலம் முதலியனவும் தொகை (எழுத்துகள் மறைந்து வருதல்), வேற்றுமை ஆகியனவும் சொல்லப்பட்டிருக்கும்.

பொருள் இலக்கணம் என்பது தமிழ் மொழிக்கே சிறப்பாக உரிய இலக்கணம் ஆகும். தமிழ் மொழியில் எழுதப்பட்ட இலக்கியங்களின் பாடுபொருளுக்கு எழுதப்பட்ட இலக்கணமே பொருள் இலக்கணம் ஆகும். பழங்காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட சங்க இலக்கியம் என்ற இலக்கியத் தொகுப்புக்கு எழுதப்பட்டதே பொருள் இலக்கணம் ஆகும். ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கொள்ளும் காதல் அகப்பொருள் எனப்பட்டது. போர், வீரம், இரக்கம், நிலையாமை, கொடை, கல்வி முதலியவை எல்லாம் புறப்பொருள் எனப்பட்டன.

Comments

Popular posts from this blog

தமிழ்நாடு இயற்கை அமைப்பு

தமிழ்நாடு இயற்கை அமைப்பு Ø   தமிழகம் 8 ° 5' வட அட்ச ரேகை முதல் 13 ° 35' வட அட்ச ரேகை வரையிலும் , 76 ° 15' கிழக்கு தீர்க்க ரேகை முதல் 80 ° 20 கிழக்கு தீர்க்க ரேகை வரையிலும் பரவிக் கிடக்கிறது. Ø   தெற்கு எல்லையான கன்னியாகுமரியில் வங்காள விரிகுடா , அரபிக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடல் என மூன்றும் சங்கமிக்கிறது. Ø   இந்திய பரப்பளவில் தமிழகம் 4 சதவீதத்தைப் பெற்றுள்ளது. Ø   பரப்பளவில் இந்தியாவின் 11 வது பெரிய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. Ø   தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 1,30,058 சதுர கிலோமீட்டர் ஆகும்.   Ø   தமிழ்நாடு 1076 கி.மீ. நீள கடற்கரையைக் கொண்டுள்ளது. Ø   இந்தியாவில் 3-ஆவது நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. ( முதலாவது குஜராத் , இரண்டாவது ஆந்திரப்பிரதேசம்) Ø   தமிழகக் கடற்கரையானது 2004ம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்டது. Ø   தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு சற்று ஏறக்குறைய முக்கோண வடிவ அமைப்பினைப் பெற்றுள்ளது. Ø   மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதி...
TNPSC GROUP - II/IIA  TEST BATCH - 2021 - (BATCH - 2)  தேர்வுகளை ஆன்லைன் வழியாக எப்போது வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம்.  வினாக்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இடம்பெறும்.  ஒவ்வொரு மாதிரித் தேர்விற்கும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் PDF புத்தகங்கள்(தமிழ்நாடு பாடபுத்தகங்கள்) பாட வாரியாக அனுப்பி வைக்கப்படும்.  ஆன்லைன் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின் PDF COPY அனுப்பப்படும். முன்பதிவிற்கு : https://forms.gle/T7MXKDZDbn3EwRTKA மாதிரித் தேர்வு :  தமிழ் மொழியில் : https://forms.gle/F6wkiMoVrbvrbDWS9 மாதிரித் தேர்வு :  ஆங்கில மொழியில் https://forms.gle/X4ndM88x5tFY2Hx99 மாதிரித் தேர்வுப் பாடத்திட்டம் – தமிழில் : https://drive.google.com/file/d/1ZPSP6iEZ9MkaRmVQsTCVBuCYXE9H-TfD/view?usp=sharing மாதிரித் தேர்வுப் பாடத்திட்டம் – ஆங்கிலம் : https://drive.google.com/file/d/1OFjhKC9m1pkdzbDOeevjSW9A_PUNpD1k/view?usp=sharing